திரிபுரா மாநிலத்தின் ஒரே ஒரு பொறியியல் கல்லுரி, திரிபுரா பொறியியல் கல்லூரி. இது 1965ம் ஆண்டு நிறுவப்பட்டது. தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வி வழங்கும் நோக்கில் துவங்கப்பட்ட இக்கல்லூரி நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள ஆறு உயர்நிலை தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஒன்று.
தொடக்கத்தில், கல்கத்தா பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் சிவில், எலக்டிரிக்கல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய பட்டப்படிப்புகள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டன. திரிபுரா பல்கலைக்கழகம் துவங்கப்பட்டதை அடுத்து, அப்பல்கலைக்கழகத்தின்கீழ் கொண்டுவரப்பட்ட இக்கல்லூரியில் 1999-2000ம் ஆண்டு முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது தரம் உயர்த்தப்பட்டு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியாக திகழ்கிறது.
பட்டப்படிப்புகள்:
சிவில் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
புரொடக்சன் இன்ஜினியரிங்
டிரான்ஸ்போர்ட்டேஷன் இன்ஜினியரிங்
தொடர்புகொள்ள:
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
அகர்தாலா 799 055
திரிபுரா
தொலைபேசி: 91-0381-2346630,2346360
பேக்ஸ்: 91-0381-2346630,2346360
இ-மெயில்: nitagartala@yahoo.co.in
வெப்சைட்: www.tec.nic.in