இந்தியாவில் புதிதாக 10 என்.ஐ.டி.க்களை உருவாக்குவது என்ற மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு மிசோரமில் புதிய என்.ஐ.டி. உருவாக்கப்பட்டது.
புதிய என்.ஐ.டி.யில் பி.டெக். பாடப் பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
மிசோரமில் புதிய கட்டடம் தயாராகாத நிலையில், நாக்பூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வளாகத்திலேயே தற்காலிகமாக மிசோரம் என்.ஐ.டி. துவக்கப்பட்டது.
புதிதாக துவக்கப்பட்டு உள்ளதால் விஸ்வேஸ்வரய்யா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் கண்காணிப்பின் கீழ் மிசோரம் என்.ஐ.டி. செயல்படும்.
முதல் கல்வி ஆண்டில் மொத்தம் 90 மாணவர்களை சேர்க்க திட்டமிடப்பட்டது. மிசோரம் மாணவர்களுக்கு 45 இடங்களும், இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு 45 இடங்களும் ஒதுக்கப்பட்டன.
மேலும் விவரங்கள் அறிய www.vnit.ac.in