22ம் தேதி விண்ணில் பாய்கிறது அக்னிகுல் ராக்கெட் | Kalvimalar - News

22ம் தேதி விண்ணில் பாய்கிறது அக்னிகுல் ராக்கெட்மார்ச் 21,2024,09:09 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தனியார் நிறுவனத்தின் அக்னிகுல் என்ற ராக்கெட் வரும் 22ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.


நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், சர்வதேச நாடுகளின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியது. அதேபோல, சூரியனை ஆய்வு செய்ய ஏவப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம், கருந்துளையை ஆய்வு செய்ய ஏவப்பட்ட எக்ஸ்போசாட் விண்கலம் ஆகியவை இந்தியாவுக்கு விண்வெளி துறையின் மீது இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியது.


இந்நிலையில் விண்வெளி துறையில் 100 சதவிகித அந்திய முதலீட்டை மத்திய அரசு சமீபத்தில் அனுமதித்திருந்ததையடுத்து தனியார் நிறுவனத்தின் ‛‛அக்னிகுல்&'&' என்ற ராக்கெட் வரும் 22ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்படஉள்ளது.


சிறப்பு:


அக்னிகுல் ராக்கெட், பூமியிலிருந்து சுமார் 700 கி.மீ உயரத்தில், 100 கி.கி எடை கொண்ட செயற்கைக்கோளை கொண்டு சென்று நிலை நிறுத்தும். இந்நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு இஸ்ரோவிடம் ராக்கெட் ஏவுவது குறித்த ஒப்பந்தத்தை போட்டிருந்தது, குறிப்பிடத்தக்கது.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us