சவுந்திரபாண்டி (பிளஸ் 2 - திண்டுக்கல் எம்.எஸ்.பி., சோலை நாடார் மேல்நிலைப் பள்ளியில் முதலிடம்) | Kalvimalar - News

சவுந்திரபாண்டி (பிளஸ் 2 - திண்டுக்கல் எம்.எஸ்.பி., சோலை நாடார் மேல்நிலைப் பள்ளியில் முதலிடம்)

எழுத்தின் அளவு :

திண்டுக்கல் எம்.எஸ்.பி., சோலை நாடார் மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று பிரிவு மாணவன் சவுந்திரபாண்டி. இவர், வரலாறு பாடத்தில் 200 க்கு 196 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் இடம் பெற்றுள்ளார்.

 

மாணவன் சவுந்திரபாண்டி கூறியதாவது:

வரலாறு ஆசிரியர் ரவீந்திரன் தான் நான் அதிக மதிப்பெண்கள் வாங்க காரணம். அவர் பாடம் நடத்திய விதம், தனிப்பட்ட முறையில் என் மீது கவனம் செலுத்தி ஆர்வமுடன் வரலாற்றுப்பாடத்தை படிக்க வைத்தது ஆகியவையே நான் மாநிலத்தில் அதிக மதிப்பெண் பெறக்காரணமாக இருந்தது. எனது தந்தை டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். எனது அண்ணன் சுவீட் கடையில் வேலை பார்க்கிறார். இவர்களின் வருமானத்தில் தான் படித்து வருகிறேன். அடுத்ததாக ஆசிரியர் பயிற்சி படிக்க விரும்புகிறேன். இதற்கு அதிக தொகை செலவாகும் என்பதால் என்ன செய்வது என்று தெரியவில்லை. இருந்தாலும் ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க உள்ளேன். மொத்தம் ஆயிரத்து 88 மதிப்பெண்கள் பெற்றுள்ளதால் மெரிட் அடிப்படையில் கிடைக்க வாய்ப்பு உண்டு என்ற நம்பிக்கையில் உள்ளேன்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us