திறன்களை வளர்க்க உதவும் ஊரடங்கு! | Kalvimalar - News

திறன்களை வளர்க்க உதவும் ஊரடங்கு!ஆகஸ்ட் 31,2020,08:39 IST

எழுத்தின் அளவு :

வகுப்பறையில் மாணவர்களுக்கு நேரடியாக கல்வி போதிப்பதை விட, ஆன்லைன் வழியிலாக கல்வி கற்பிப்பதில் அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 



எனினும், மாணவர்களுக்கு கல்வி மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் புதுப்புது வழிமுறைகளை பின்பற்றி, வகுப்பறை கல்வி போன்றே ஆன்லைன் வாயிலாகவும் எங்களது கல்வி பேராசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். ஒவ்வொரு வகுப்பிலும், க்விஸ் போட்டி, சிறு தேர்வு மற்றும் மதிப்பீடும் ஆன்லைன் வாயிலாகவே நடத்துகிறோம். இதற்காக, 'பைனரி’ எனும் பிரத்யேக செயலியை எங்களது பேராசிரியர்களே வடிவமைத்துள்ளனர். 



தொழில்நிறுவனங்களுடனான நல்லுறவிற்கு பெயர்போன எங்கள் கல்லூரி, இந்த ஊரடங்கு காலத்திலும் ஆன்லைனிலேயே ’இண்டஸ்ட்ரி கனெக்ட்’ நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. அதுமட்டுமின்றி, ‘யு கேன் டூ இட்’ வெபினார்கள், முன்னாள் மாணவர்கள் பங்கேற்கும் வெபினார்கள், ஸ்டூடன்ஸ் வெபினார், ஆன்லைன் டீச்சிங் டூல்ஸ் அண்டு டெக்னிக்ஸ், டிரைனிங் பார் இண்டர்நேஷனல் ஸ்டூடன்ஸ், தேசிய அளவிலான ஆன்லைன் டெக்னிக்கல் கருத்தரங்கு, அறிவியல் மற்றும் கணித குவிஸ் உட்பட பல்வேறு ஆன்லைன் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை ஆன்லைன் வாயிலாகவே நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  



மாற்றத்திற்கு ஏற்ப தயாராகுங்கள்



'கோர் இன்ஜினியரிங்’ பிரிவில் வேலைவாய்ப்பு குறைவு என்றும், ஊதியம் குறைவு என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், அதில் உண்மையில்லை. இப்பிரிவில் தொழில்நுட்ப ரீதியாக ஆட்டோமேஷன் மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு ஏற்ப இன்றைய மாணவர்கள் தயாராக வேண்டியது நல்லது. உதாரணமாக, ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவருக்கு, கோடிங், புரொகிராமிங், எலக்ட்ரானிக்ஸ் போன்ற இதர துறை அறிவை வளர்த்துக்கொண்டால் அவர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசம். 



இந்த ஊரடங்கு காலத்தை முறையாக பயன்படுத்தி, ஏ.ஆர்., வி.ஆர்., டேட்டா அனலிட்டிக்ஸ், ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்களையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கான பயிற்சியையும் எங்களது மாணவர்களுக்கு ஆன்லைனில் வழங்கி வருகிறோம். அனைத்து மாணவர்களுக்கும் அவரவர்களது துறை சார்ந்த மற்றும் தேவையான தொழில்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தொழில் நிறுவனங்கள் அவர்களுக்கு தேவையான, தகுதியான மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்வதும் இன்று ஆன்லைனில் நடைபெறுவதால், வேலைவாய்ப்பிற்கான பயிற்சியையும் ஆன்லைனில் வழங்கிவருகிறோம்.



-சுதா மோகன்ராம், முதல்வர், ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், கோவை




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us