சி.ஏ., படிப்பில் சேருவதற்கான சி.பி.டி., தேர்வு பற்றி கூறலாமா? | Kalvimalar - News

சி.ஏ., படிப்பில் சேருவதற்கான சி.பி.டி., தேர்வு பற்றி கூறலாமா? அக்டோபர் 05,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

முன்பு போல அல்லாமல் சி.ஏ..வில் சேர விரும்புபவர்கள் 10ம் வகுப்புக்குப் பின் காமன் புரபிசியன்சி டெஸ்ட் (சி.பி.டி.) எனப்படும் பொதுத் திறனறியும் தேர்வுக்காக தங்களது பெயரை இன்ஸ்டிடியூட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்தத் தேர்வை +2வுக்குப் பின்தான் எழுத முடியும். ஆனால் முன்னதாகவே பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்து கொண்டு 60 நாட்களுக்குப் பின்தான் சி.பி.டியை எழுத முடியும். இதில் தகுதி பெறுபவர் முதல் கட்டப் படிப்பான பி.சி.சியில் சேரலாம். புரபசனல் கம்பீடன்ஸ் கோர்ஸ் எனப்படும் இந்தப் படிப்பு முந்தைய தொடக்க நிலைப் படிப்புக்குச் சமமனாது. இதே நேரத்தில் கட்டாயமான 100 மணி நேர இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்புக்கும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அது போலவே ஒரு பதிவு பெற்ற சார்ட்டர்ட் அக்கவுண்டன்டிடம் நடைமுறை பயிற்சிக்காகவும் பதிவு செய்து கொள்ள வேண்டும். 3மாத ஆர்ட்டிகிள்சிப்புக்குப் பின் 100 மணி நேர ஐ.டி. பயிற்சியை முடிக்க வேண்டும். பின்பு மொத்தமாக 15 மாத நடைமுறை பயிற்சிக்குப் பின் பி.சி.ஈ. எனப்படும் புரபசனல் கம்பீடன்ஸ் எக்ஸாம் என்னும் தேர்வை எழுத முடியும்.

இதை முடித்தபின் மூன்றரை ஆண்டு நடைமுறைப் பயிற்சி மற்றும் பொது மேலாண்மை மற்றும் தகவல் தொடர்புத் திறன் படிப்பையும் முடிக்க வேண்டும்.பின்பு இறுதித் தேர்வில் கலந்து கொள்ளலாம். இதன் பின்பே ஒருவர் சி.ஏ.. எனப்படும் சார்ட்டர்ட் அக்கவுண்டன்டாக பதிவு செய்து கொள்ளலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us