ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாணவர் கவுதம் பிளஸ் 2 தேர்வில் ஆயிரத்து 168 மதிப்பெண் (தமிழ்-185, ஆங்கிலம்-186, கணிதம்-200, வேதியியல்-199, இயற்பியல்-199, உயிரியல்-199) பெற்று திண்டுக்கல் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.
கவுதம் கூறுகையில், ஒரு நாளைக்கு 7 மணி நேரம் படிப்பேன், தனியாக டியூசன் எதுவும் செல்லவில்லை. பள்ளியில் நடத்தும் பாடங்களை அன்றன்றே படித்து விடுவேன். முக்கியமாக டிவி மற்றும் சினிமா பார்ப்பதை முற்றிலுமாக தவிர்த்தேன். பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தினால் இந்த இடத்தை பெற முடிந்தது. இன்ஜினியர் ஆவதே லட்சியம் என்றார்.