தட்ப வெப்பம் பற்றித்தான் இன்று மனிதன் மிக அதிகமாக கவலைப்படவும் யோசிக்கவும் வேண்டியிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாகத் தான் இது பற்றிய விழிப்புணர்வு அதிகமாக இருந்து வந்தாலும் இன்று தவிர்க்கமுடியாத அம்சமாக மாறியுள்ளது. கார்ப்பரேட் துறை, அரசுத் துறை, என்.ஜி.ஓக்கள் என தட்பவெப்ப இயல் படித்தவருக்கு அதிகமான தேவை காணப்படுகிறது. அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் நுணுக்கங்களை நமது தட்பவெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதை இன்று தட்ப வெப்ப இயல் துறை ஆய்வாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இது போலவே இதை தொழில்நுட்பமாக அறிந்து கொள்பவருக்கு கார்ப்பரேட் தொழிற்சாலைகளில் அதிக வரவேற்பு இருப்பதையும் காண்கிறோம்.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு, என்.ஜி.ஓக்களின் ஆய்வுப் பணிகள், சுற்றுச் சூழல் பொறியியல், இயற்கை விஞ்ஞானம், விலங்குகள் பாதுகாப்பு, நீர்வள பராமரிப்பு என இத் துறையில் சிறப்புப் படித்தவருக்கான வாய்ப்புகள் பல இருக்கின்றன. அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர் இத் துறையில்