சென்னை மண்டல சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வில் கேந்திர வித்யாலயா மாணவர் விக்னேஷ் வெங்கடாசலம் 495 மதிப்பெண்கள் (ஆங்கிலம் - 98, சமஸ்கிருதம்-100, அறிவியல்-98, கணிதம்-98, சமூக அறிவியல்-100) பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சக மாணவர்கள் கடும் போட்டியாளர்களாக விளங்கினர். அதுவே அதிக மதிப்பெண்கள் எடுக்க எனக்கு உதவியது. கடந்த ஆண்டு எனது வகுப்பில் நான்காவது இடம்பெற்ற நிலையில், தற்போது முதலிடம் பெற்றுள்ளேன்.
டிவி, இன்டர்நெட் ஆகியவற்றை தவிர்த்து எனக்கு முதலில் வருத்தம் அளித்தாலும், பிறகு அவற்றின் மீதிருந்த ஆர்வத்தை வெகுவாக குறைத்துக்கொண்டேன். எனக்காக எனது பெற்றோர்களும் அவற்றை பயன்படுத்தாததால் என்னால் முழுமையாக படிப்பில் கவனம் செலுத்த முடிந்தது. இல்லையென்றால், இவ்வளவு மதிப்பெண்களை நான் எடுத்திருக்க முடியாது.
வகுப்புகள் விரைவில் துவங்க இருப்பதால் இந்த வெற்றியை நான் கொண்டாட விரும்பவில்லை, என்று தெரிவித்தார்.