வேறு குழந்தைகள் இல்லாமல் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பங்களில் பெற்றோரில் எவரேனும் ஒருவர் 35 வயதுக்கு முன்னதாக குடும்பக் கட்டுபாட்டு அறுவைச் சிகிச்சை செய்திருந்தால், குழந்தையின் பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிறுவனத்தில் அரசு ரூ,22 ஆயிரத்து 200 டெபாசிட் செய்யும்.
டெபாசிட் செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்தாண்டு முதல் கிடைக்கும் வட்டித் தொகையில் இருந்து மாதம் ஒன்றுக்கு நூற்று ஐம்பது ரூபாய் அந்த பெண் குழந்தை கல்வி பயில்வதற்காக வழங்கப்படுகிறது. இருபதாம் ஆண்டில் முழுமையாக வட்டியுடன் கூடிய முதிர்வுத் தொகை அப்பெண்ணின் மேற்படிப்பு மற்றும் திருமண செலவிற்கு உதவும் வகையில் வழங்கப்படும்.
இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருந்து ஆண் குழந்தை இல்லாத குடும்பங்களில் அப்பெண் குழந்தைகள் ஒவ்வொருவரின் பெயரிலும் தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் தலா ரூ.15 ஆயிரத்து 200 டெபாசிட் செய்யப்படும். இத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியை கொண்டு டெபாசிட் செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்தாம் ஆண்டு முதல் அப்பெண் குழந்தைகள் கல்வி பயில ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.150 வழங்கப்படுகிறது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் கூடிய முதிர்வுத் தொகை முழுமையாக ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். அது, அந்த குழந்தையின் மேற்படிப்பு மற்றும் திருமணச் செலவுக்கு உதவும்.