நான் ஜான்சிராணி. பி.எஸ்சி., இயற்பியல் படித்துக் கொண்டுள்ளேன். இப்படிப்பை முடித்தப்பிறகு, ஏர்லைன் துறையில் சாதிக்க, எனக்கு எதுபோன்ற வாய்ப்புகள் உள்ளன? | Kalvimalar - News

நான் ஜான்சிராணி. பி.எஸ்சி., இயற்பியல் படித்துக் கொண்டுள்ளேன். இப்படிப்பை முடித்தப்பிறகு, ஏர்லைன் துறையில் சாதிக்க, எனக்கு எதுபோன்ற வாய்ப்புகள் உள்ளன?பிப்ரவரி 16,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

உங்களது பி.எஸ்சி., இயற்பியலை முடித்தப்பிறகு, எலக்ட்ரானிக்ஸ் பாடத்தை முக்கியமாகக் கொண்ட எம்.எஸ்சி படிப்பை, ஐஐடி போன்ற முக்கிய கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டும். ஐஐடி -யில் இடம்பெற JAM(எம்.எஸ்சி படிப்பிற்கான கூட்டு சேர்க்கைத் தேர்வு) எழுதி தகுதிபெற வேண்டும்.

இன்னொரு வழி என்னவெனில், பி.இ. படிப்பில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் முடித்து, ஏர் டிராபிக் கண்ட்ரோலர் தேர்வை எழுத வேண்டும். ஏர் டிராபிக் கண்ட்ரோலர் தொழிலைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு www.atcguild.com என்ற இணையதளம் செல்க.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us