என் பெயர் மலர்விழி. நான் 10ம் வகுப்பு படிக்கிறேன். எதிர்காலத்தில் பயோடெக்னாலஜி துறையில் ஈடுபட விரும்புகிறேன். எனவே, அதுதொடர்பாக எனக்கு அறிவுரை கூறுங்கள்... | Kalvimalar - News

என் பெயர் மலர்விழி. நான் 10ம் வகுப்பு படிக்கிறேன். எதிர்காலத்தில் பயோடெக்னாலஜி துறையில் ஈடுபட விரும்புகிறேன். எனவே, அதுதொடர்பாக எனக்கு அறிவுரை கூறுங்கள்...ஏப்ரல் 03,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

நீங்கள் 10ம் வகுப்பை முடித்தப்பிறகு, மேல்நிலைப் பிரிவில், உயிரியில், இயற்பியில், வேதியில் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களைக் கொண்ட குரூப்பை தேர்வுசெய்ய வேண்டும். பள்ளிப் படிப்பை முடித்தப்பின்னர், பி.டெக்.,(பயோடெக்னாலஜி) அல்லது பி.எஸ்சி.,(பயோடெக்னாலஜி, வேதியியல், விலங்கியல், தாவரவியல்) ஆகிய படிப்புகளில் ஏதேனுமொன்றை தேர்வுசெய்து படிக்க வேண்டும்.

இப்படிப்புகளைத் தவிர, பி.பார்ம்., பி.எஸ்சி.,(வேளாண்மை), எம்.பி.பி.எஸ்., கால்நடை மருத்துவம் போன்றவைகளில் ஏதேனுமொன்றையும் எடுத்துப் படிக்கலாம். மேற்கூறிய படிப்புகளில் ஏதேனுமொன்றை முடித்தவர்கள், எம்.எஸ்சி.,(பயோடெக்னாலஜி) அல்லது புனே பல்கலை வழங்கும், 5 வருட எம்.எஸ்சி.,(பயோடெக்னாலஜி) ஆகிய படிப்புகளில் சேரலாம்.

பயோடெக்னாலஜி துறையானது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறைகளில் ஏராளமான பணிவாய்ப்புகளை வழங்குகிறது. மேலும், உயர்கல்வித்துறை ஆசிரியப் பணியில் நிறைய வாய்ப்புகள் உள்ளதால், இத்துறையில் பிஎச்.டி., ஆராய்ச்சியை நிறைவுசெய்வது உகந்தது. மேலும், பள்ளிப் படிப்பின்போதே, உலகில் என்ன நடக்கிறது, என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதைப் பற்றி பரவலான முறையில் உங்களின் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அப்போதுதான், பள்ளிப் படிப்பை முடிக்கும் தருவாயில், எதை மேற்கொள்ளலாம் என்பதை பலவகையிலும் யோசித்து முடிவெடுக்க வசதியாக இருக்கும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us