மெட்ரிக் தேர்வில் 470 மதிப்பெண் எடுத்து கோட்டையூர் முத்தையா அழகப்பா மெட்ரிக்., பள்ளி மாணவர் அமராவதி தேவகோட்டை கல்வி மாவட்ட அளவில் 3ம் இடம் பிடித்துள்ளார்.
அவர் கூறுகையில், முழு ஈடுபாட்டுடன் படித்ததால் அதிக மார்க் பெற்றேன். அறிவியல், கணக்கு பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படித்தேன். தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்ற லட்சியம் இருந்ததால் உடல், மனதை கட்டுப்படுத்தி படித்தேன். தேர்வில் வெற்றி ஒன்றே லட்சியம் எனநினைத்து கடுமையாக உழைத்தால் அதிக மார்க் பெறலாம் என்றார்.