கிராமப்புறப் பள்ளிகளில் பயிலும் திறமை மிக்க மாணவர்களை ஊக்குவிப்பதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் அரசு தேர்வுத் துறை இயக்குநரால் இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 50 மாணவர்கள், 50 மாணவிகள் என மொத்தம் 100 மாணவர்கள் இத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையாக ஆயிரம் ரூபாயும், 4 ஆண்டுகளுக்கு (9ம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரை) தொடர்ந்து வழங்கப்படுகிறது. இதற்காக அரசு ஒரு கோடி ரூபாய் செலவிடுகிறது.