துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவி | Kalvimalar - News

துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவி

எழுத்தின் அளவு :

இத்திட்டத்தின் கீழ் துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அவர்களது சாதி,மதம் மற்றும் வருமான வரம்பினை கணக்கில் கொள்ளாமல் உதவித்தொகை வழங்கப்படுகிறது. விடுதியில் தங்காது பயிலும் மாணவ, மாணவியர்க்கு மாதம் ஒன்றிற்கு முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 40 ரூபாயும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 60 ரூபாயும், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பிற்கு 75 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
 
விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் மாதம் 300 ரூபாயும்,  ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு படிப்பவர்களுக்கு மாதம் 375 ரூபாயும் வழங்கப்படுகிறது. தனி மானியமாக விடுதியில் தங்காமல் படிக்கும் மாணவ, மாணவியர்க்கு ஆண்டுக்கு 550 ரூபாயும், விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு 600 ரூபாயும் வழங்கப்படுகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us