கோவை, கே.கே.புதூரை சேர்ந்தவர் முகமது இஜாஸ்; பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 495 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.
இவர் பள்ளியில், பிரெஞ்ச் பாடத்தை முதன்மை பாடமாக கொண்டு படித்தவர்; தேர்வில் பிரெஞ்ச், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் முறையே 99, 98, 100, 100, 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
அவர் கூறியது: சமர்ச்சீர் பாடப் புத்தகங்கள், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்தான் வழங்கப்பட்டன. இதை, ஒரு சிரமமாக கருதாமல், சமச்சீர் பாடத் திட்டங்களை புரிந்து கொண்டு படித்தேன். இதுவே, எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது, என்றார்.