மாநில அளவில் முதல் இடம் பெற்ற ரம்யா: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பிரெஞ்ச் மொழியை பாடமாக கொண்டு, செயின்ட் மைக்கேல் மெட்ரிக்குலேஷன் பள்ளியை சேர்ந்த, ரம்யா என்ற மாணவி மாநில அளவில், முதல் இடம் பெற்றுள்ளார்.
இது குறித்து மாணவி ரம்யா கூறியதாவது: முதல் மதிப்பெண் பெற்றதற்கு, எனது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரே காரணம். ஆசிரியர்கள் பாடம் குறித்த சந்தேகங்களை தீர்த்து வைப்பர். அடிக்கடி தேர்வு வைத்தனர். இதனாலேயே எனக்கும் தேர்வு குறித்த பயம் இல்லாமல் போனது. அதேபோல முதன் முதலில் சமச்சீர் வழியில் தேர்வு எழுதியதாக எனக்கு தெரியவில்லை. அந்த அளவுக்கு ஆசிரியர்கள் இங்கு பயிற்சி அளித்தனர்.
மேலும், வீட்டில், தினமும் நான் ஒரு மணி நேரம் படிப்பிற்காகவே ஒதுக்குவேன். தேர்வு நேரத்தின்போது, "டைம் மேனேஜ்மென்ட்" முக்கியமாக பின்பற்றினேன். இதனாலேயே என்னால் சாதிக்க முடிந்தது. வருங்காலத்தில், ஹோட்டல் மேனெஜ்மேன்ட் அல்லது கட்டட கலை துறை எடுத்து படிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
மதிப்பெண்: பிரெஞ்ச்100, ஆங்கிலம் 99, கணக்கு 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 98