"எதில் பலவீனமாக இருந்தேனோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்து படித்ததால் வெற்றி பெற்றேன்" என்று பிளஸ் 2 வில் மாநில அளவில் 1187 மதிப்பெண்கள் எடுத்து, மூன்றாம் இடம் பிடித்த மாணவி ராஜேஸ்வரி கூறினார்.
பிளஸ் 2வில் மாநில அளவில் மூன்றாமிடம் எடுத்த மாணவி ராஜேஸ்வரி கூறியதாவது, எந்தப் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுக்கிறோம் என்பதற்கே, பெரும்பாலான மாணவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், அதைவிட, எதில் பலவீனமாக இருக்கிறோம் என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான், திட்டமிட்டு செயல்பட்டு, நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். என்றார்.