பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்த மாணவி கண்மணியின் பெற்றோர் விபரம், தந்தை கலியமூர்த்தி, சுயதொழில் புரிபவர், தாய் கமலா, இல்லத்தரசி.
மாணவி எடுத்த மொத்த மதிப்பெண்: 1,187/ தமிழ்-198; ஆங்கிலம்- 192; இயற்பியல் -197; வேதியியல்- 200; உயிரியல்- 200; கணிதம்- 200.
கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்லில் படித்த மாணவி கண்மணி கூறியதாவது, "பாடங்களை மனப்பாடம் செய்வது மட்டுமின்றி, புரிந்து படிக்க வேண்டும். அதன்படி, ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை புரிந்து படிப்பேன். மருத்துவம் படிக்க உள்ளேன். எதிர்காலத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி, மக்களுக்கு சேவை செய்வதே என் எதிர்கால குறிக்கோள்." என்றார்