ஷ்ரேஷ்தா நுழைவுத்தேர்வு | Kalvimalar - News

ஷ்ரேஷ்தா நுழைவுத்தேர்வுஏப்ரல் 04,2022,11:20 IST

எழுத்தின் அளவு :

கல்வியில் சிறந்து விளங்கும் எஸ்.சி., மாணவர்கள் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டணமின்றி படிக்கும் வாய்ப்பை வழங்குகிறது ஷ்ரேஷ்தா நுழைவுத்தேர்வு!



திட்டம்: ஸ்கீம் பார் ரெசிடென்சியல் எஜுகேஷன் பார் ஸ்டூடன்ஸ் இன் ஹை கிளாசஸ் இன் டார்கெட்டர்டு ஏரியாஸ் - ஷ்ரேஷ்தா



முக்கியத்துவம்: மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கான நுழைவுத்தேர்வை என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த தேசிய அளவிலான நுழைவுத்தேர்வில் சிறப்பாக செயல்படும் 3 ஆயிரம் மாணவர்களுக்கு, மத்திய அரசு, உயர்தர கல்வியை இலவசமாக வழங்குகிறது. தேர்வு செய்யப்படும் மாணவர்கள் 9ம் மற்றும் 11ம் வகுப்பில் சிறந்த சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சேர்க்கப்படுவர்.



தகுதி: ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு குறைவான குடும்ப வருமானம் கொண்ட எஸ்.சி., பிரிவை சேர்ந்த மாணவர்கள். 



தேர்வு முறை: ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கேள்விகள் கேட்கப்படும். நேரடி தேர்வாக நடைபெறும் இந்த நுழைவுத்தேர்வை எழுத விரும்பும் எஸ்.சி., மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.



தேர்வு காலம்: 3 மணிநேரங்கள்



விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள மாணவர்கள் https://shreshta.nta.nic.in/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.



விபரங்களுக்கு: https://nta.ac.in/ மற்றும் http://shreshta.nta.nic.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us