கோவை அவிநாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பவித்ரா, சத்துணவியல் பாடப் பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
"அப்பா விஜயன் கூலி வேலை பார்த்துதான், என்னை படிக்க வைத்தார். கஷ்டத்தை உணர்ந்து, பொழுதுபோக்குக்கு இடம் கொடுக்காமல் படித்தேன். தினசரி மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை படிப்பேன். மாநிலத்தில் முதல் இடம் வாங்க வேண்டும் என்பதே என் லட்சியமாக இருந்தது.
இரண்டு மார்க் குறைந்து இரண்டாம் இடம் பிடித்ததும் சந்தோசம்தான். ஒரு வருடமாக "டிவி" பார்ப்பதை தவிர்த்து விட்டேன். படித்து நல்ல மார்க் வாங்க வேண்டும் எனும் சிந்தனையே எப்போதும் இருக்கும்.
என்னுடைய முயற்சிக்கு ஆசிரியர்கள், பெற்றோர் ஒத்துழைப்பு அளித்தனர். தமிழ் 178, ஆங்கிலம் 166, இயற்பியல் 153, வேதியியல் 167, உயிரியல் 164, சத்துணவியலில் 198 என மொத்தம் 1026 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். பயோ டெக்னாலஜி படிக்க ஆசை," என்றார்.