விலங்கியல் பாடப்பிரிவில் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பள்ளி மாணவன் ஆஸ்லி டேனியேல், விலங்கியல் பாடத்தில் மாநிலத்தில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
இவர் தமிழ்-163, ஆங்கிலம்-184, இயற்பியல்-193, வேதியல்-195, தாவரவியல்-198, விலங்கியல்-197 ஆக மொத்தம் 1030 மார்க் பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவன் ஆஸ்லி டேனியேல் கூறும்போது, "கடவுளின் கிருபையால் வெற்றி பெற்றுள்ளேன். அடுத்ததாக என் அம்மா, அப்பா தந்த ஒத்துழைப்பு. பள்ளி ஆசிரியர்கள், முதல்வர், சக மாணவர்கள் மற்றும் தம்பியின் நல்லாதரவுமே என்னை வெற்றியாளனாக்கியது.
அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் தந்தை பிரபல டாக்டர். அவர் படித்து மெரிட்டில் டாக்டர் ஆனார். என் உறவினர்கள் அதிகம் பேர் டாக்டர் தான். அப்பாவை போல நானும் படித்து மெரிட்டில் டாக்டராக வர வேண்டும் என்பது என் லட்சியம்." என்றார்.