"அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால், எந்த லட்சியத்திலும் வெற்றி நிச்சயம்" என, சமஸ்கிருதம் பாடத்தில் மாநிலத்தில் முதல் மதிப்பெண்ணும், பிற மொழிப்பாடத்தை எடுத்து படித்த மாணவர்களில் மாநில அளவில் இரண்டாமிடமும் பெற்ற மாணவி அபிநயா கூறினார்.
சென்னை, ஆதம்பாக்கம், டி.ஏ.வி.,மேல்நிலை பள்ளி மாணவி அபிநயா, சமஸ்கிருதம் பாடத்தில், 198 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் முதல் இடத்தில் உள்ளார். இதுகுறித்து மாணவி அபிநயா கூறியதாவது:
"சமஸ்கிருத பாடத்திற்கு, மற்ற பாடத்தை விட அதிக கவனம் செலுத்தினேன். புதிய மொழி என்ற பயம் விலகியது. இனி, எந்த மொழியையும் எளிதாக கற்று கொள்ள முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. ஆசிரியர்கள் அதிகமாக ஊக்கப்படுத்தினார்கள். அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால், எந்த லட்சியத்திலும் வெற்றி பெற முடியும்." இவ்வாறு மாணவி தெரிவித்தார்.
மாணவி அபிநயா எடுத்த மதிப்பெண்கள் வருமாறு...
சமஸ்கிருதம் 198, ஆங்கிலம் 193, வணிகவியல் 200, கணக்குபதிவியல் 200,
பொருளியல் 200, வணிக கணிதம் 200, மொத்தம் 1191.