"பாடத்தை புரிந்து படித்ததால், நுண்ணுயிரியல் பாடத்தில், மாநில முதல் ரேங்க் பெற்றதாக," தூத்துக்குடி மாணவி மதுமிதா தெரிவித்தார்.
தூத்துக்குடி, சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி மதுமிதா. இவர், பிளஸ் 2வில், நுண்ணுயிரியல் பாடத்தில், 197 மதிப்பெண்கள் பெற்று, மாநில முதலிடம் பிடித்தார். மொத்த மதிப்பெண்கள்:1,089. தந்தை சகாதேவன், அரசு வக்கீல். தாய் வளர்மதி, கூட்டுறவுத்துறை அதிகாரி.
மதுமிதா கூறும்போது, "மனப்பாடம் செய்யாமல், பாடத்தை புரிந்து படித்ததால், சாதித்தேன். அதற்கு, பெற்றோர், ஆசிரியர் ஊக்கம் தந்தனர். அதிகாலையை விட இரவில் நீண்ட நேரம் கண் விழித்து படித்தேன்" என்றார்.