78 சதவீத கிராமப்புற பெற்றோர் தங்களது பெண் குழந்தைகள் குறைந்தது பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற விரும்புவதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில், 20 மாநிலங்களில் உள்ள 6 ஆயிரத்து 229 கிராமப்புற குடும்பங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், ’கிராமப்புற இந்தியாவில் தொடக்கக் கல்வியின் நிலை-2023’ என்ற அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 82 சதவீத ஆண் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் 78 சதவீத பெண் குழந்தைகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகளை பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படிக்க வைக்க விரும்புகிறார்கள் என்றும் கிராமத்தில் அல்லது சுற்றுப்புற கிராமங்களில் உயர்நிலை பள்ளிகள் இல்லாத காரணத்தால் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் ஆரம்ப கல்வியோடு படிப்பை நிறுத்துகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.