மவுலீஸ்வரன் (பிளஸ் 2 தேர்வு - ஆட்டோ மொபைலில் மாநில இரண்டாமிடம்) 2013 | Kalvimalar - News

மவுலீஸ்வரன் (பிளஸ் 2 தேர்வு - ஆட்டோ மொபைலில் மாநில இரண்டாமிடம்) 2013

எழுத்தின் அளவு :

மாநில அளவில் ஆட்டோ மொபைல் பாடத்தில் இரண்டாம் இடம் பிடித்த மாணவர் மவுலீஸ்வரன் ஐ.ஆர்.எஸ்., அதிகாரியாக விரும்புகிறார்.

பொள்ளாச்சி பழனிகவுண்டர் பள்ளியில் பிளஸ் 2 படித்தவர் மவுலீஸ்வரன். இவர் பிளஸ் 2 தேர்வில்; ஆட்டோ மொபைல் பாடத்தில் (தொழிற்கல்வி பிரிவு) 197 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

தமிழில் 168, ஆங்கிலத்தில் 168, கணிதத்தில் 142, செய்முறை தேர்வு-1ல் 200, செய்முறை-2ல் 200 என மொத்தம் 1,075 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மவுலீஸ்வரன் அளித்த பேட்டி: " என் தந்தை ராமகிருஷ்ணன் கார் டிரைவராக பணிபுரிகிறார். எனக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பெரிதும் ஊக்கமளித்ததால் மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்தேன்.

படிப்பதை மட்டும் கடமையாகக்கொண்டு, அதில் முழுமையாக ஆர்வம் செலுத்தினேன். இரவு பகல் பாராது படித்தேன். பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து ஐ.ஆர்.எஸ்., அதிகாரியாக வேண்டும் என்பது ஆசை," என்றார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us