நாகர்கோவில் கவிமணி தேசிக விநாயகம் பள்ளி மாணவி நித்யா. இவர் டிராப்ட்மேன் சிவில் பாடத்தில் 600 மதிப்பெண் பெற்று, மாநில இரண்டாம் இடம் பெற்றுள்ளார். மொத்த மதிப்பெண்கள் 1058. இவரது தந்தை ஆறுமுகம் கட்டிட தொழிலாளி.
மாணவி நித்யா கூறியதாவது: "எனது தந்தை என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். பள்ளியில் ஆசிரியைகள் எனக்கு ஊக்கம் தந்தனர். தந்தையின் கஷ்டத்தை போக்க நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தேன்.அதன் படி மாநில அளவில் ரேங்கும் நல்ல மதிப்பெண்ணும் கிடைத்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக டிவி பார்ப்பதை நிறுத்தி விட்டு படித்தேன். சிவில் இஞ்ஜினியரிங் துறையில் செல்ல விரும்புகிறேன்." இவ்வாறு அவர் கூறினார்.