பத்தாம் வகுப்பு தேர்வில், கூடுவாஞ்சேரி நீலன் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி துர்கா, 500க்கு 497 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழில் 97, ஆங்கிலத்தில் 100, கணிதத்தில், 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
மாணவி துர்கா கூறுகையில், "அனைத்து பாடங்களையும், தெளிவாக படித்ததால், தேர்வை பயமின்றி, எளிதாக எழுத முடிந்தது. தேர்வு நேரத்தில், தொலைக்காட்சி, விளையாட்டு போன்றவைகளை தவிர்த்து, முழு கவனத்துடன் படித்ததால், அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தது. இதற்கு உறுதுணையாக இருந்த என் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்பது என் ஆசை," என்றார்.