தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 137 மாணவ, மாணவிகள் 496 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3ம் இடத்தை பிடித்துள்ளனர்.
இதில் வள்ளியூர் நாலந்தா மெட்ரிக் பள்ளி மாணவி சோனியா தமிழ்-98, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
தந்தை ரகுபால், தாய் கலாராணி ஏர்வாடியில் நர்சரி பள்ளி ஒன்று நடத்தி வருகின்றனர். மாணவி சோனியாவின் தம்பி ராகுல் இதே பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார் மாநில அளவில் 3ம் இடத்தை பிடித்த மாணவி சோனியா கூறும்போது,
"கணக்கு பிரிவு எடுத்து மேற்படிப்பு படிக்க இருப்பதாகவும், வருங்காலத்தில் எந்த துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தாலும் அதில் நேர்மையாக பணியாற்ற விரும்புகிறேன்" என்றார்.