நான் புத்தகபுழு அல்ல! : கார்த்திகா தேவி கூறுகையில், "அப்பா சுகுமார் தங்கநகை தொழிலாளி. கல்வி ஆண்டு துவங்கியதும் பாடங்களை திட்டமிட்டு படிக்க துவங்கினேன். முழு நேரமும் புத்தக புழுவாக இருக்கவில்லை. ஆசிரியர்கள் கற்றுக்கொடுப்பதை வீட்டில் தினமும் பயிற்சி எடுத்தேன். இயற்பியல் பாடத்தில் சென்டம் கிடைத்துள்ளது. அனைத்து பாடங்களுக்கும் முந்தைய பொதுத்தேர்வு வினா- விடையை எழுதிப்பார்த்து பயிற்சி எடுத்தது பயனுள்ளதாக இருந்தது. பி.இ. சிவில் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க திட்டமிட்டுள்ளேன்" என்றார்.