பஞ்சாப் அண்டு சிந்து வங்கி | Kalvimalar - News

பஞ்சாப் அண்டு சிந்து வங்கி

எழுத்தின் அளவு :

கல்விக் கடன் தொகை அளவு:

மாணவர்கள்/பெற்றோர்களின் கடனை திருப்பிச் செலுத்தும் திறன் அடிப்படையில் கடன் வழங்கப்படும்.

  • இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
  • வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

செலுத்த வேண்டிய முன்தொகை:

  1. நான்கு லட்சம் ரூபாய் வரை-எதுவுமில்லை
  2. நான்கு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக- இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் ஐந்து சதவீதம்; வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் 15 சதவீதம்

வட்டி விகிதம்:

நான்கு லட்சம் ரூபாய் வரை:

  • வங்கி ஊழியர்: பி.பி.எல்.ஆர்., மைனஸ் 1.00% 
  • இதர பொதுமக்கள்: பி.பி.எல்.ஆர்., மைனஸ் 2.00%

நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல்:

  • வங்கி ஊழியர்: பி.எல்.ஆர்., மைனஸ் 0.50%
  • இதர பொதுமக்கள்: பி.பி.எல்.ஆர்., மைனஸ் 1.50%

கடனை திருப்பி செலுத்தும் முறை:

படிப்பை முடித்த ஒரு ஆண்டிற்கு பிறகு அல்லது வேலை கிடைத்த ஆறாவது மாதத்திலிருந்து(இரண்டில் எது முதலில் வருகிறதோ) கடனை திருப்பி செலுத்த வேண்டும். ஏழு ஆண்டுகளுக்குள் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.

 

உத்தரவாதம்:

நான்கு லட்சம் ரூபாய் வரை: சொத்து பிணை தேவையில்லை.

நான்கு லட்சம் ரூபாய் முதல் ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை: மூன்றாம் நபர் உத்தரவாதம் தேவை

ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல்:சொத்துப்பிணை, கடன்தொகையை திருப்பி செலுத்துவதாக பெற்றோர், மாணவர் அல்லது மூன்றாவது நபர் ஒப்புதல்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us