பயோடெக்னாலஜியில் பி.எஸ்சி., இறுதியாண்டு படிக்கும் எனக்கு வேலை வாய்ப்புகள் எப்படி உள்ளன எனக் கூறவும். | Kalvimalar - News

பயோடெக்னாலஜியில் பி.எஸ்சி., இறுதியாண்டு படிக்கும் எனக்கு வேலை வாய்ப்புகள் எப்படி உள்ளன எனக் கூறவும். செப்டம்பர் 20,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

பயோடெக்னாலஜி துறையானது மிக வேகமாக வளரும் துறைகளில் ஒன்றாக விளங்குகிறது. பார்மா மற்றும் பயோடெக் நிறுவனங்களின் ஆய்வுப் பிரிவுகளில் இன்று சிறப்பான பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.

பயோடெக் பாடத்தில் மிகச் சிறப்பான டெக்னிக்கல் திறன் பெற்றிருப்பவருக்கு இந்த வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால் பொதுவாக இந்தப் பணிகள் பட்ட மேற்படிப்பு முடித்திருப்பவருக்குத் தான் கிடைக்கின்றன. பட்டப் படிப்பு முடிப்பவருக்கு பார்மா மற்றும் பயோ அனலிடிகல் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களில் குவாலிடி கன்ட்ரோல், புரடக்சன், மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.

ஆய்வு தொடர்பான உயர் பணிகளுக்குச் செல்ல விரும்புவோர் பட்ட மேற்படிப்பை கட்டாயம் படிக்க வேண்டும். கேட் தேர்வு எழுதி சிறப்பான மதிப்பெண் பெறுவோருக்கு இது எளிதாகக் கிடைக்கிறது. ஆய்வில் ஆர்வம் இல்லாதவருக்கு பட்டப்படிப்பிற்குப் பின் எம்.பி.ஏ. என்பது நல்ல தேர்வாக அமையும். ரான்பாக்சி மற்றும் டாக்டர் ரெட்டீஸ் லேப் போன்ற தலைசிறந்த நிறுவனங்களில் இந்த வாய்ப்புகள் பெறலாம் என்பது சிறப்பு.

துவக்கத்தில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் தரக்கூடிய பணிகள் இவை. எனவே பட்டப்படிப்பு போதும் என்று நீங்கள் முடிவு செய்தாலும் கூட இந்தப் பணிகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்கட்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us