ஜியோ இன்பர்மேடிக்ஸ் நல்ல துறையா? | Kalvimalar - News

ஜியோ இன்பர்மேடிக்ஸ் நல்ல துறையா?செப்டம்பர் 23,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

தட்ப வெப்ப நிலைகளைப் பற்றிய கணிப்புகள், வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது தரப்படும் முன்னெச்சரிகைக் குறிப்புகள், இயற்கை வளங்களை பாதுகாப்பது போன்ற பணிகளுக்கு தற்போது மிகவும் உதவும் துறை ஜியோஇன்பர்மேடிக்ஸ் துறையாகும்.

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், கம்ப்யூட்டர் புரொகிராமிங் தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றைக் கொண்டு மேப்பிங், டேட்டா சேகரிப்பு போன்ற பணிகளை இதைப் படித்தவர்கள் மேற்கொள்கிறார்கள்.

வளர்ந்த நாடுகளில் இது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள படிப்பாகும். சுற்றுச் சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களை பாதுகாப்பது, பிரதான சாலைகளைத் தொடர்ந்து கவனிப்பது, விபத்து சமயங்களில் உதவுவது, சென்சஸ் போன்ற பல பணிகளிலும் இதை முடிப்பவர்கள் வேலைக்குச் செல்கின்றனர்.

இந்த படிப்பை முடிப்பவர்கள் தனியாக இயங்குவதை விட குழுவாக இயங்குவதையே காண்கிறோம். 21ம் நூற்றாண்டின் மிக முக்கிய துறைகளில் ஒன்றாக இது விளங்கத் தொடங்கியுள்ளது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us