நான் பி.இ. இறுதியாண்டுக்குச் செல்லவிருக்கிறேன். எனது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன? | Kalvimalar - News

நான் பி.இ. இறுதியாண்டுக்குச் செல்லவிருக்கிறேன். எனது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன?ஏப்ரல் 24,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

இது தொடர்பாக நமது
நாளிதழின் இந்தப் பகுதியில் தொடர்ந்து கட்டுரைகள் வெளியாகிறது. தவறாமல் பார்த்து வரவும்..உங்களது கேள்வியானது இன்று நமது மாணவர்கள் பலர் உணரக்கூடிய ஒரு முக்கியமான சந்தேகம். நமது பாடத் திறன்களுடன் "சாப்ட்" திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றே நமது நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இன்று வேலை வாய்ப்புத் துறையால் அதிகம் பேசப்படும் வார்த்தையும் இது தான். ஒரு நிறுவனத்தின் அடிப்படை உற்பத்தி அல்லது சேவையாடு தொடர்புடையது அந்த நிறுவனத்திற்குத் தேவைப் படும் சாப்ட் திறன்கள். அடிப்படையில் சாப்ட் திறன்கள் என்றால்
* தகவல் தொடர்புத் திறன்கள்
* சக ஊழியர் அல்லது பணியாளரோடு பழகும் திறன்கள்
* குழுத் திறன்கள்
* தலைமை தாங்கி வழி
நடத்தும் திறன்கள்
* அடிப்படை சுபாவம்
* இணைந்து செயலாற்றும் மனப்பாங்கு
* தட்டிக்கொடுத்து ஊழியர்களை ஊக்குவித்து அவர்களது அடிப்படை செயலாற்றும் திறனை மேம்படுத்தும் திறமை
ஆகியவற்றைக் கூறலாம்.
இன்று இந்த சாப்ட் ஸ்கில்ஸ் மேம்பாட்டுக்கு உதவ எண்ணற்ற மனிதவள மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்கள் மதுரை போன்ற சற்றே பெரிய நகரங்களில் செயல்படுகின்றன. ஊரகப் பகுதியில் படிக்கும் உங்களைப் போன்ற மாணவர்களுக்கு இவை நிச்சயம் உதவும். இன்ஜினியரிங் இறுதியாண்டில் நுழைந்தவுடன் இவற்றில் சேரலாம். நீங்களாகவே சாப்ட்ஸ்கில்ஸை வளர்த்துக் கொள்வதும் முடியாத காரியமல்ல. ஆங்கிலத்தை வளர்த்துக் கொள்ளும் முயற்சிகள், நாளிதழ் வாசிப்பு, பொதுவான தலைப்புகளை விளையாட்டாக நண்பர்களோடு விவாதித்தல் போன்றவற்றை நீங்கள் தொடர்ந்து பொழுது போக்காக செய்தாலே இவை வளர்ந்து விடும். உங்களது பாடத்தில் நீங்கள் பெற்றிருக்கும் திறன்களைப் போலவே இந்த சாப்ட் ஸ்கில்சும் மிக மிக முக்கியம்.

மென்திறன்கள் என்னும் சாப்ட்ஸ்கில்களை வளர்த்துக் கொள்வதன் மூலமாக மட்டுமே ஒருவர் தன்னை வேலைகளைப் பெறக்கூடியவராக மாற்றிக் கொள்ள முடியும். இன்று இத்துறையில் தனிநபர்களும் பயிற்சி தருகின்றனர். எனினும் இவர்களில் பலர் போதிய திறன்களைப் பெறாமல் இன்றைய கால கட்டத்தின் தேவைகளைக் கொண்டு காசு பண்ணும் வேலையில் ஈடுபட்டிருப்பதை இளைஞர்கள் கவனித்து சேர வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us