கவிஞர்களுக்கு கவிஞர் கண்ணதாசன் விருது | Kalvimalar - News

கவிஞர்களுக்கு கவிஞர் கண்ணதாசன் விருதுமார்ச் 22,2024,10:06 IST

எழுத்தின் அளவு :

கோவை: கோவை கண்ணதாசன் கழகம் சார்பில், இந்த ஆண்டுக்கான கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


கோவையில் செயல்பட்டு வரும் கண்ணதாசன் கழகம், கடந்த 2009 ம் ஆண்டு முதல் கவிஞர் கண்ணதாசன் பெயரில், விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.


இந்த ஆண்டு திரைப்படத்துறை மற்றும் கவிதை துறை பங்களிப்புக்காக சினிமா பாடலாசிரியர் கவிஞர் பழநிபாரதிக்கும், நீரதிகாரம் படைப்புக்காக கவிஞர் அ.வெண்ணிலாவுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.


விருது பெறும் படைப்பாளர்கள் இருவருக்கும் பாராட்டுப் பட்டயமும், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது. கோவையில் வரும் ஜூன் மாதம் நடக்கும் விழாவில், அமைப்பின் நிறுவனர் கிருஷ்ணகுமார், இந்த விருதுகளை வழங்குகிறார்.


இதுவரை இந்த விருதுகளை நாஞ்சில்நாடன், வண்ணதாசன் எஸ்.ராமகிருஷ்ணன், அசோகமித்திரன், ஜெயமோகன், சாரு நிவேதிதா,- கலாப்ரியா உள்ளிட்ட எழுத்தாளர்களும், சினிமா பின்னணி பாடகர்கள் சீர்காழி சிவசிதம்பரம், வாணி ஜெயராம், பி.சுசீலா எல்.ஆர்.ஈஸ்வரி உள்ளிட்ட பல கலைஞர்களும் பெற்றுள்ளனர்.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us