கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது | Kalvimalar - News

கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைதுமார்ச் 25,2024,09:40 IST

எழுத்தின் அளவு :

திருபுவனை: மதகடிப்பட்டு அருகே கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.


புதுச்சேரி மதகடிப்பட்டு - திருக்கனுார் சாலையில் கலிதீர்த்தாள்குப்பம் அரசு கல்லுாரி எதிரே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது.


அதன்பேரில், திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்துகொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.


அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 3 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள் கண்டமங்கலத்தை சேர்ந்த பரணி, 21; முத்துவேல் 20; மற்றும் சென்னையை சேர்ந்த ராகவேந்திரன், 21; என்பது தெரியவந்தது.


இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, மூவரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பெரியகாலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us