புதுச்சேரி: வில்லியனுார் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம் சார்பில் ஊட்டச்சத்து இருவார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி செட்டிப்பட்டில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மருத்துவ அதிகாரி குறிஞ்சிநாதன் முன்னிலை வகித்தார். கிராமப்புற செவிலியர் அம்பிகா ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை நோய் குறித்தும், அதனை சரி செய்ய எடுத்துக் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் குறித்தும் விளக்கம் அளித்தனர். ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் கண்காட்சி நடந்தது. இதில், வளர் இளம் பருவத்தினர், கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அங்கன்வாடி ஊழியர்களால் தயார் செய்யப்பட்ட ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.