ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் நேற்றுமுன்தினம் சிமெண்ட் கூரை பெயர்ந்து விழுந்ததில் யாரும் இல்லாததால் பாதிப்பு இல்லை. அதேசமயம் எப்போது வேண்டுமானலும் நோயாளிகளுக்க விபத்து அபாயம் உள்ளது. அதற்கு முன்பாக அதனை செப்பனிட மருத்துவமனை நிர்வாகம் முன்வர வேண்டும்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவுக்கு கட்டடமும், வெளி நோயாளிகள், 500 படுக்கைகள் கொண்ட கட்டடம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந் நிலையில் பழைய கட்டடங்கள் பயன்பாட்டில் இல்லாத நிலையில் பராமரிப்பு பணிகள் செய்யப்படாததால் கூரை இடிந்து விழுந்து வருகின்றன. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை காஸ் சிலிண்டர் வைக்கப்படும் அறை, பணியாளர்கள் கழிப்பறை ஆகிய இருக்கும் இடத்தில் நேற்று காலை கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது. அந்த நேரத்தில் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு இல்லை. இப்பகுதியில் ஊழியர்கள் செல்வதற்கு பயந்து வருகின்றனர். பழைய கட்டுமானத்தை முறையாக பராமரிப்பு செய்து ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.