மதுரையில் தினமலர் வழிகாட்டி நிறைவு | Kalvimalar - News

மதுரையில் தினமலர் வழிகாட்டி நிறைவுமார்ச் 26,2024,09:36 IST

எழுத்தின் அளவு :

மதுரை: மதுரையில் தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனைகள் வழங்கிய வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நிறைவடைந்தது.


நிகழ்ச்சியில் இரண்டு நாட்களாக நடந்த நான்கு கருத்தரங்கு அமர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பெற்றோர் பங்கேற்று நிபுணர்களின் உயர்கல்வி ஆலோசனைகளை பெற்றனர். 117 கல்வி நிறுவனங்களின் அரங்குகளை காலை 10:30 மணியில் இருந்து மாலை 6:30 மணிவரை இடைவேளையின்றி பார்வையிட்டு கல்வி நிறுவனங்கள், அங்குள்ள பாடப்பிரிவுகள் குறித்தும் விண்ணப்பம் முதல் சேர்க்கை வரை உள்ள சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொண்டனர்.


இந்நிகழ்ச்சிக்கான பவர்டு பை பங்களிப்பை கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், அமிர்தா விஷ்வ வித்யாலயம் செய்தன. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கே.எம்.சி.ஹெச்., அண்ட் டாக்டர் என்.ஜி.பி., நிறுவனங்கள், கோவை எஸ்.என்.எஸ்., இன்ஸ்டிடியூஷன்ஸ், கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்ஸ் ஆப் இந்தியா ஆகியன இணைந்து வழங்கின.


திண்டுக்கல்லில் மார்ச் 30, 31ல் வழிகாட்டி


மதுரை நிகழ்ச்சியை தவற விட்ட மாணவர்கள் மார்ச் 30, 31ல் திண்டுக்கல் தாடிக்கொம்புரோடு பி.வி.கே., மஹாலில் காலை 10:00 முதல் மாலை 6:30 வரை நடக்கும் வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். அங்கு 40க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, கல்வி ஆலோசகர் அஸ்வின் உள்ளிட்ட கல்வியாளர்கள் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us