பொதுவாக இத் துறையில் சிறப்பு நிலையில் பணியாற்ற விரும்புபவர்கள் மனித வளப் பிரிவில் எம்.பி.ஏ., பி.ஜி., டிப்ளமோ இவற்றில் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது அடிப்படைப் பட்டப்படிப்பு ஒன்றுடன் இப் பிரிவில் சிறப்பு டிப்ளமோ தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். மனித வள மேலாண்மைத் திறன்களையும் நிர்வாகத் திறன்களையும் பெற்றிருப்பவர்களையே இப் பணிக்கு எடுத்துக் கொள்கின்றனர். தொடக்கத்தில் பெறும் சில ஆண்டு அனுபவத்தின் பின் அதன் அடிப்படையில் பெரிய நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெறலாம்.