உங்களைப் போல நம் இளைஞர்கள் பலருக்கும் திடீரென படித்துக் கொண்டிருக்கும் படிப்பு பிடிக்காமல் போய்விடுகிறது. அடிப்படையில் நம் ஆர்வம் எதில் என்பது ஒரு புறம், எது நமக்குப் பிடிக்காத படிப்பு என்பதையும் ஒவ்வொருவரும் ஒரு படிப்பில் சேரும் முன்பு யோசிக்க வேண்டும். ஆனால் அடுத்தவர் சேர்ந்த ஒரே காரணத்தினால் அதில் சேர்ந்து படிப்பது பாதியிலேயே தொய்வை ஏற்படுத்தி விடும். 2ம் ஆண்டில் உள்ள நீங்கள் இப்படிப்பை அப்படியே நிறுத்தி விட்டு பி.எஸ்சி., இயற்பியலில்
சேரலாம். ஆனால் அதில் சேர்ந்த பின்பு அதுவும் பிடிக்காமல் போய்விடும் வாய்ப்பும் உங்களைப் போன்றவருக்கு இருக்கிறது. மாறாக அஞ்சல் வழியில் நீங்கள் பி.எஸ்சி., இயற்பியல் படிப்பை மேற்கொள்ளலாம். யோசித்து முடிவெடுக்கவும்.