ஆசிரியர் : நெல்லை சு.முத்து
ஆன்ம விடுதலைக்கு வித்திட்டவர்களுக்கு இணையானவர் அறிவியல் பிரம்மாக்கள்.தம் முழு வாழ்வையும் அர்ப்பணித்து தத்தமது கண்டுபிடிப்புகளால் இன்னமும் அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.
பொருள் என்பது துகள்களால் ஆனது. ஆற்றல் என்பது அலை வடிவம். ஒரே சமயத்தில் பொருளும் ஆற்றலும் மரபான கோட்பாடுகளில் விளக்க முடியாது (பக்.68) நீள் ஒளி மீள்வதில்லை, நேர் கோடெல்லாம் நிமிராத வளை கோடே (பக்.34) ஐன்ஸ்டீனைக் கவர்ந்த நியூட்டனின் நிறையீர்ப்பு விதி (பக்.92) என்பவை இந்நூல் தரும் பல செய்திகளில் சில.இனிய தமிழில் 25 தலைப்புகளில் பற்பல புகைப்படங்களுடன் ஐன்ஸ்டீனின் வாழ்வையும் வாக்கையும் ஆசிரியர் அழகாக வெளியிட்டுள்ளார். .
விலை: ரூ 90, பக்கம்: 192
வெளியீடு:
வாலண்டினா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை-94.
போன் : 044-2361 1311.