அரசுத் துறையில் போட்டோகிராபர்களுக்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அப்ப-டியே கேட்கப்பட்டாலும் அவை மிக அரிதாகவே வருகின்றன. தற்போதைய சூழலில் போட்டோகிராபி அறிந்தவருக்கு பல்வேறு சுய தொழில் வாய்ப்புகளும் கம்பெனி வாய்ப்புகளும் உள்ளன. அடிப்படையில் நீங்கள் கம்ப்யூட்டர் திறன் பெற்றிருப்பதும் போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர்களில் நல்ல கிரியேடிவ் திறன் பெற்றிருப்பதும் உங்களுக்கு மிக நல்ல வாய்ப்புகளை தரும். எனவே அரசு வேலைக்காகக் காத்திராமல் நீங்கள் உடனடியாக நல்ல முடிவை எடுப்பதே பலன் தரும்.
ஒரிசாவிலுள்ள உத்கல் பல்கலைக் கழகம், பூனாவிலுள்ள பெர்குசான் கல்லூரி, அலகாபாத் பல்கலைக்கழகம் ஆகியவை போட்டோகிராபியில் பட்டப்படிப்புகளை நடத்துகின்றன. இவை உங்களுக்கு முறையான கல்வித் தகுதியைத் தரும். இவை அனைத்துமே நேரடி முறை படிப்புகளாகும்.