ஆங்கில பாடத்தில் சாதித்த மாணவி கேரன் | Kalvimalar - News

ஆங்கில பாடத்தில் சாதித்த மாணவி கேரன்

எழுத்தின் அளவு :

பாளையங்கோட்டை பெல் மெட்ரிக் பள்ளி மாணவி கேரன், பிளஸ் 2 தேர்வில் மொழிப்பாடமாக ஆங்கிலம் தவிர, கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம் என்ற சிறப்பு பாடத்தில் 182 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவரது தந்தை சவரிராயன் டாக்டராகவும், தாய் லில்லி வாலன்டினா அரசு துறையில் இன்ஜினியராகவும் பணியாற்றுகின்றனர்.

 

கல்வி மலருக்காக மாணவி கேரன் கூறுகையில், சிறுவயதில் இருந்து ஆங்கில பாடத்தில் அதிக விருப்பம் உண்டு. பிளஸ் 2 வகுப்பில் எங்கள் பள்ளியில் நான் ஒருத்திதான் இந்த பாடத்தை படித்தேன்.

 

ஒரு மாணவிக்காக தனிப்பாடத்தை நடத்துவது சிரமம் என்றாலும் எங்கள் பள்ளி நிர்வாகம் அதனை செய்தது. இந்த வெற்றிக்கு பள்ளி முதல்வர், ஆசிரியர் லதா ஆகியோரின் ஒத்துழைப்புதான் காரணம்.  ஆங்கிலத்துறையில் பேராசிரியராக பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் என்றார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us