ராஜஸ்தான் மாநிலத்தில் துவக்கப்பட்ட முதல் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் என்ற பெருமையைப் பெறுகிறது இந்த ஐஐஎம்.
புதிதாக துவக்கப்பட்ட 6 ஐஐஎம்மில் உதைப்பூர் மாவட்டத்தில் துவங்கிய இந்த ஐஐஎம்-மும் ஒன்றாகும்.
பாடப்பிரிவு : மேலாண்மைப் பிரிவில் போஸ்ட் கிராஜுவேட் புரோகிராம் (பி.ஜி.பி.) (2 ஆண்டுகள்)
தேர்வு முறை : செமஸ்டர் தேர்வு முறை நடத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுகளில் 4 செமஸ்டர் தேர்வுகளை எழுத வேண்டும்.
சேர்க்கை முறை : கேட் நுழைவுத் தேர்வின் முடிவை அடிப்படையாகக் கொண்டு சேர்க்கை நடைபெறுகிறது.
சேர்க்கை இடங்கள் : மொத்தம் 72 மாணவ சேர்க்கை இடங்கள் உள்ளன.
விண்ணப்பங்கள் : விண்ணப்பங்களை இந்தோர் ஐஐஎம்-மின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ அல்லது ஆன்லைனிலோ கூட பூர்த்தி செய்து அனுப்பலாம்.
கால அவகாசம் : மே 23ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 25ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தற்போது இந்தோர் ஐ.ஐ.எம். நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது.
முகவரி
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் இந்தூர்,
பிரபந்த் ஷிகார்,
ராவ்-பிதாம்பூர் சாலை,
இந்தோர் - 453331