விஷ்ணுபாரதி (எஸ்.எஸ்.எல்.சி., தமிழில் மாநில முதலிடம்) - 2010 | Kalvimalar - News

விஷ்ணுபாரதி (எஸ்.எஸ்.எல்.சி., தமிழில் மாநில முதலிடம்) - 2010

எழுத்தின் அளவு :

ஆசிரியர் பாடம் நடத்தும் போது குறிப்பு எடுத்து படித்ததால் மாநில அளவில் தமிழ்பாடத்தில் முதலிடம் பிடிக்க முடிந்தது என மாணவி விஷ்ணுபாரதி கூறினார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேனி மாவட்டம் கூடலூர் என்.எஸ்.கே. பொன்னையாகவுண்டர் மேல்நிலைப்பள்ளி மாணவி விஷ்ணுபாரதி தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

மாணவி மொத்த மதிப்பெண்களில் உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார். மாணவி விஷ்ணுபாரதி கூறுகையில், ஆசிரியர் பாடம் நடத்தும் போது குறிப்பு எடுத்து வைத்து படிப்பேன். டியூசன் செல்லவில்லை. பெற்றோர்களும், ஆசிரியர்களும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தனர். மாநில அளவில் முதல் ரேங்க் பெறுவதற்கான முயற்சியில் துவக்கத்தில் இருந்தே படித்து வந்தேன். தமிழில் மட்டுமே மாநில அளவில் முதல் ரேங்க் பெறமுடிந்தது. ஒரு வார்த்தை கேள்வி பதில்களை கவனமுடன் படித்தேன் என்றார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us