எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வில் தேவகோட்டை தூயமரியன்னை பெண்கள் பள்ளி மாணவி ஆர். நந்தினி 491 மதிப்பெண் பெற்று சிவகங்கை வருவாய் மாவட்டத்திலும், தேவகோட்டை கல்வி மாவட்டத்திலும் முதலிடம் பிடித்து சாதித்துள்ளார்.
அவர் கூறுகையில், பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்குவேன் என எதிர்பார்த்தேன். மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி. ஆசிரியைகள், பெற்றோர் ஊக்குவித்தனர். படிக்கும் போது டென்ஷன் ஆகமாட்டேன். ஜனவரி வரை மிகவும் ரிலாக்ஸாக நம்பிக்கையுடன் படித்தேன். பத்திரிக்கைகளில் வெளியான மாதிரி வினா விடைகளை தொகுத்து வைத்து படித்ததால் சாதிக்க முடிந்தது என்றார்.