பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 490 மதிப்பெண் பெற்று ராமநாதபுரம் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார் தொருவளூர் அரசு உயர் நிலை பள்ளி மாணவி ஆனந்தி.
மாநிலத்தில் முதல் மூன்று இடங்களில் ஒரு இடத்தை பிடிப்பேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அதை தவற விட்டது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட அளவில் முதலிடம் பெற்றிருந்தாலும் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெறுவதற்காக படிப்பேன். அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படித்தேன். ராங்க் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் ஆர்வம் செலுத்தவில்லை. படிப்பில் மட்டுமே எனது கவனம் இருந்தது. பொது தேர்வுக்காக படிக்கும் மாணவ, மாணவிகள் தங்கள் லட்சியத்தை உணர்ந்து கொண்டு படித்தால் தாங்கள் நினைத்த மார்க்கை எளிதாக பெறலாம் என்கிறார் ஆனந்தி.