உலக வர்த்தக அரங்கில் இந்தியர்களின் குரலுக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்கவும், அதற்கான அங்கீகாரத்தை வழங்கவும் ‘ஸ்டான்போர்டு பிஸ்னஸ் ஸ்கூல்’ கல்வி நிறுவனத்துடன் இணைந்து ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டட்’ வழங்கும் உதவித்தொகை திட்டம் இது!
ஸ்டான்போர்டு ரிலையன்ஸ் திருபாய் பெலோஷிப்
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகக் கருதப்படுவது அமெரிக்காவில் அமைந்திருக்கும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் முதுநிலை மேலாண்மை படிப்பான எம்.பி.ஏ.,வில் 400 மாணவர்கள் சேர்க்கை பெறுகின்றனர். இங்கு சேர்க்கை பெற விரும்பும் தகுதியான இந்திய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ட்ரீஸ் லிமிட்டட், ‘ஸ்டான்போர்டு ரிலையன்ஸ் திருபாய் பெலோஷிப்’ உதவித்தொகையை வழங்குகிறது.
தகுதிகள்:
இந்தியக் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
ஸ்டான்போர்டு பல்கலையில் இரண்டு ஆண்டு முதுநிலை வணிக நிர்வாக படிப்பிற்கான சேர்க்கையை பெற வேண்டும்.
மேலும் மாணவர்களின் அறிவாற்றல், தலைமைத்துவம் மற்றும் தனிப்பட்ட பண்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர்.
குறிப்பாக ஜிமேட் அல்லது ஜி.ஆர்.இ., மற்றும் ஐ.இ.எல்.டி.எஸ்., பி.டி.இ., அல்லது டோபல் தகுதித் தேர்வுகளை எழுதியிருக்க வேண்டும்.
குறிப்பு: இந்த உதவித்தொகையைப் பெற்ற மாணவர்கள் கட்டாயம் குறைந்தது 2 ஆண்டுகளாவது இந்தியாவில் பணியாற்ற வேண்டும்.
உதவித்தொகைகள்:
கல்விக் கட்டணத்தில் 80 சதவீதம், உதவித்தொகையாக வழங்கப்படும். இதைத் தவிர கல்விக் கடன் மற்றும் பிற நிதியுதவிகளையும் மாணவர்கள் பெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த உதவித்தொகைக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் வாயிலாக மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் கவனமாக விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
விபரங்களுக்கு: www.gsb.stanford.edu