ஐ.டி., இ.சி.இ., படிப்பு வேண்டாம்: கல்வியாளர் அறிவுரை | Kalvimalar - News

ஐ.டி., இ.சி.இ., படிப்பு வேண்டாம்: கல்வியாளர் அறிவுரை

எழுத்தின் அளவு :

ஐ.டி., மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் 4 ஆண்டுகளில் இந்தத் துறையில் வேலை வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்து விடும் என்று கான்பூரிலுள்ள ஐ.ஐ.டி. மற்றும் சென்னை வளர்ச்சிப் படிப்பு மையம் ஆகியவற்றின் தலைவரும் முன்னாள் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான அனந்த கிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

தமிழக அரசின் www.employment.tn.gov.in  தளத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட வெப் சாட் நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் இதை அவர் தெரிவித்தார். என்.ஐ.சி., எனப்படும் நேஷனல் இன்பர்மேடிக்ஸ் சென்டர் இதை ஏற்பாடு செய்து நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் இந்த கல்வியாளரிடம் உரையாடினார்கள்.

‘இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் துறை வேகமாக வளருகிறது. சிவில் இன்ஜினியரிங் மிகச் சிறந்த எதிர்காலத்தைக் கொண்டிருக்கிறது...இந்தியாவில் குறைவான வாய்ப்புகளைக் கொண்டிருந்தாலும் பயோமெடிக்கல் துறை வெளிநாடுகளில் எண்ணற்ற வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. எனவே ஐ.டி. என்பது நான் அறிவுறுத்தும் துறையாக இல்லை‘ என்று அவர் தெரிவித்தார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us